அம்பாந்தோட்டை – மத்தல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.