பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) விவாத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலை மாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதம் இடம்பெற்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அரச நிதி முகாமைத்துவம் சட்ட மூலத்துக்கு எதிர்க்கட்சி ஆதரவளித்துடன் பொருளாதார நிலை மாற்றம் சட்டமூலத்துக்கு தரவளித்தாலும் அதன் சில சரத்துக்களுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அவ்வாறான நிலையில் மாலை 5,30 மணி வரை விவாதம் இடம்பெற்று இறுதியில் சட்டமூலத்துக்கு சபையின் அனுமதியை சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் கோரினார்.
இதன்போது எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் பொருளாதார நிலை மாற்றம் சட்டமூலத்துக்கு எமது எதிர்ப்பினை பதிவிடுகிறோம் என தெரிவித்தார்.
அதன் பிரகாரம் குறித்த இரண்டு சட்டமூலங்களும் திருத்தங்களுடன் சபையில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.