உலர்ந்த கடல் அட்டைகளுடன் இருவர் கைது!

கல்லடி கடல் பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, உலர்ந்த கடல் அட்டைகளுடன் 02 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 49 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 673 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பு பகுதிகளில் நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினரால் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.