உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொன்வெவ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்போவ பகுதியில் வசிக்கும் 67 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.