ஐந்து நாட்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கத்தார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் 05 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.