அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில், குவிந்துள்ள ஒரு கிலோகிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழு அனைத்து நீதவான்களுக்கும் அறிவித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருடைப்பாடு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினதாச விடுத்த கோரிக்கைக்கு அடைய, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1981 மற்றும் 2023க்கு இடையில் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கிலோகிராமுக்கு குறைவான போதைப்பொருள் மாதிரிகள் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருடைப்பாடு அமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பில், விசாரணைகள் முடிந்த போதிலும், இந்த மாதிரிகள் தொடர்ந்து சேமிக்கப்படுவதனால் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் இட நெருக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், போதுமான சேமிப்பு வசதிகளை வழங்குவதற்கான சாத்தியமில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திலிருந்து பூர்த்தி செய்யப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்கு அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கையை பரிசீலித்த பின்னர், அனைத்து நீதவான்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.





