கட்டானையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டான பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் ஒருவர் வர்த்தகரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்ற நிலையில், வர்த்தகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட வர்த்தகரான முன்னாள் பிரதேச சபை உறுப்பிர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.