குற்றப்புலனாய்வுதுறைக்கு பெரும் ஆதாரமாகியுள்ள பிள்ளையானின் புத்தகம்..!

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளதாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர பிமல் ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிள்ளையான் வெளியிட்ட புத்தகத்தையே குற்றப்புலனாய்வு பிரிவினர் பெரும் ஆதாரமாக்கியுள்ளார்கள்.

அந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள் எப்படி இவரால் எழுதப்பட்டது? இவற்றிற்கான மூலங்கள் அவருக்கு எங்கிருந்து பெறப்பட்டது என்ற விவரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக இரகசிய தகவல்கள கிடைக்கின்றன.

இந்த புத்தகத்தினுடைய பின்னணி குறித்து பிள்ளையான் தற்போது மெல்ல கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.