தேசிய கலை இலக்கியப் பேரவை முன்னெடுக்கும் நூறு மலர்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளிலான 21 ஆவது புத்தக அரங்க விழா வெள்ளிக்கிழமை (26.07.2024) யாழ்.சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28.07.2024) வரையான மூன்று தினங்கள் புத்தக அரங்க விழா தொடர்ந்து இடம்பெறும்.
எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.