அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெலம்புகஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கலென்பிந்துனுவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயாகலை மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 35, 37, 60 மற்றும் 65 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.