அம்பாறையில் உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நால்வர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திஸ்ஸர மற்றும் ஜா – எல ஆகிய பகுதிகளில் வசிக்கும் 27,28,30 மற்றும் 38 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.