ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு சஜித் கண்டனம்

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மனித குலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை (22) ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகளால் சாரமாரியான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜம்மு ரூ காஷ்மீரில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மனித குலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.