நல்லூர்த் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு அண்மையில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நிகழ்வில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் க.கைலைநாதன் பங்கேற்றுச் ‘ சித்தர் பெருமை’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.






