நிக்கவெரட்டியவில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குருணாகல் – நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தணிகிதவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நிக்கவெரட்டியபொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிக்கவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரகொஸ்வத்தை பகுதியில் வசிக்கும் 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.