நெல்லியடிச் சந்தை சுற்றாடலைத் தூய்மையாக்கும் பணியில் கரவெட்டிப் பிரதேசசபை உத்தியோகத்தர்கள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டுப் புதன்கிழமை(04.06.2025) காலை கரவெட்டிப் பிரதேச சபை சார்ந்த ஒரு பிரிவு அலுவலர்கள் காலை-07 மணி தொடக்கம் காலை-09 மணி வரையிலான காலப்பகுதியில் நெல்லியடிச் சந்தைப் பிரதேசத்தில் தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பொதுமக்கள் பங்களிப்பு குறைவாகவே உள்ளன. எனினும், விடாமுயற்சியாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் உத்தியோகத்தர்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டார்களெனக் கரவெட்டிப் பிரதேசசபையின் செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தெரிவித்தார்.