கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 3 கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.