யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் அலுவலகத்திற்கு இனந்தெரியாத இருவர் தீ வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) அதிகாலை 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத இருவர், மவ்பிம ஜனதா கட்சியின் அலுவலகத்தின் கதவு வழியாக பெற்றோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.
தீ பரவலில் அலுவலகத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



