அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
118 வகையான தோட்டாக்கள் 5.56x 45mm ரக தோட்டாக்கள் பொலிஸ்நிலையத்தில் சனிக்கிழமை (10) பாணமை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிப்பதோடு தனது சகோதரரிடம் குறித்த வீட்டினை பழுதுபார்க்கும் பணியை ஒப்படைத்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாணமை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




