7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூரியுள்ளது.

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்த எச்சரிக்கை  சனிக்கிழமை (06)  இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மரங்களுக்குக் கீழ் நிற்க வேண்டாம்.

வயல் நிலங்கள், தேயிலை தோட்டங்கள் போன்ற திறந்த வெளி பிரதேசங்களில்  நிற்க வேண்டாம்.

தொலைபேசிகள், மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்

சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.  

விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 

அவசர உதவிக்காக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.