இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் ஷ்ரவஸ்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து 71 வயது இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து 46 சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மதத் தலத்தைப் பார்வையிட சென்றுள்ளனர்.
இதன்போது, கொட்கொட தனது அறையை விட்டு வெளியே வராமையினால் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தப்போது பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் முகாமையாளருக்கு தெரிவித்துள்ளனர். அவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸ் நிலைய அதிகாரி (SHO) லால் சாஹேப் சிங் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் மரணம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் கண்காணிப்பாளர் (SP) ராகுல் பாட்டி தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை சாதாரணமாக இருந்தாகவும் உடலை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தூதரகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பம் தொடர்பில் எந்த முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை எனவும், உயிரிழந்த பெண்ணுடன் வந்த இலங்கை சுற்றுலாப் பயணி சடலத்தை எடுத்துச் சென்றுவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





