கடின உழைப்புக்கு குரல் கொடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு விருது

நாட்​டுக்​காக கடுமை​யாக உழைப்​பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சிக்​கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது கிடைத்​துள்​ளது.

நீண்ட பணி நேரத்​துக்கு புகழ் ​பெற்ற நாடு ஜப்​பான். இங்​குள்ள பெண்​கள் வீட்டு வேலைகளு​டன், அலு​வலக பணி​களை​யும் மேற்​கொண்டு கடுமை​யாக உழைக்​கின்​றனர். இந்​நிலை​யில் ஜப்​பானின் முதல் பெண் பிரதம​ராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்​யப்​பட்​டார்.

அப்​போது அவர் எம்​.பி.க்​களிடம் பேசுகை​யில், ‘நீங்​கள் குதிரையை போன்று பணி​யாற்ற வேண்​டும். பணி​யும் – வாழ்க்​கை​யும் சமநிலை​யில் இருக்க வேண்​டும் என்ற எண்​ணத்தை நான் கைவிடு​வேன். எனது நாட்​டுக்​காக , நான் வேலை, வேலை, வேலை என கடுமை​யாக உழைப்​பேன் என கூறி​னார்.

இவரது பேச்​சும், ஸ்டைலும் ஜப்​பான் மக்​களை மிக​வும் கவர்ந்து வரு​கிறது. இவர் பயன்​படுத்​தும் கைப்​பை, பேனா ஆகிய​வற்​றின் பிராண்​டு​களும் பிரபலம் அடைந்து விற்​பனையை அதிகரிக்கின்றன. இவர் ஜப்​பான் பெண்​களுக்கு முன் மாதிரி​யாக திகழ்​கிறார்.

இந்​நிலை​யில் அவர் கூறிய “நாட்​டுக்​காக உழைத்​துக் கொண்டே இருப்​பேன்’ என்ற வாசகத்தை இந்​தாண்டு சிறந்த வாசக​மாக தேர்வு செய்து தனி​யார் அமைப்பு ஒன்று டாகாய்ச்​சிக்கு விருது வழங்​கி​யுள்​ளது.

இந்த விருதை ஏற்​றுக் கொண்ட டகாய்ச்சி கூறுகை​யில், “எனது ஆர்​வத்தை வலி​யுறுத்​தவே நான் விரும்​பினேன். மற்​றவர்​கள் அதிக நேரம் பணி​யாற்ற வேண்​டும் என்​பதை ஊக்​கு​விப்​ப​தா, நீண்ட நேரம் பணி​யாற்​று​வது நல்​லது என்று கூறு​வது எனது நோக்கம் இல்​லை. நான் கூறியதை யாரும் தவறாக புரிந்​து கொள்ள வேண்​டாம்​” என கூறி​னார்​.