கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ரொக்கட் தாக்கியது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ட்ரூஸ் நகரத்தின் மஜ்டல் சாம்ஸினை இலக்குவைத்து லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் ஹெஸ்புல்லா அமைப்பு இதனை மறுத்துள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக பதில்தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த அமைப்பு பெரும் விலையை செலுத்தும் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலிய படையினருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் முழுமையான யுத்தம் வெடிக்கும். ஆபத்து எழுந்துள்ளது.
ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் ஏழாம் திகதிக்குபின்னர் இஸ்ரேலிய எல்லையின் மீது மேற்கொல்லப்பட்ட தாக்குதலில் அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக கோலான் குன்று தாக்குதல் காணப்படுகின்றது.