கனமழையால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
விமான நிலையத்தின் டெர்மினல் 1 இல் நிறுத்தப்பட்டுள்ள கார்களின் மீது கூரையைத் தாங்கி நிற்கும் பெரிய தூண்கள் உடைந்து வீழ்ந்துள்ளன.
டெர்மினலில் இருந்து அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, செக்-இன் கவுன்டர்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் வியாழன் 05:00 மணிக்கு (23:30 GMT) நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாற்று விமானங்களில் பயணிகளுக்கு இடமளிக்க அல்லது அவர்களுக்கு பணத்தைத் திரும்பப் பெறுமாறு இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெரும்பாலான உள்நாட்டு விமானங்கள் டெர்மினல் 1இல் இருந்து புறப்படுவதால், இந்த விபத்து ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணத் திட்டங்களை பாதித்துள்ளது.
சில விமான நிறுவனங்கள் விமான நிலையத்தின் மீதமுள்ள இரண்டு டெர்மினல்களுக்கு விமான நடவடிக்கைகளை மாற்றியுள்ளன.