பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.அ. இராச்­சி­யத்தில் 43 பேருக்கு ஆயுள்­தண்­டனை

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான வழக்­கு­களில் 43 பேருக்கு ஆயுட்கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள், அர­சியல் மாற்றுக் கருத்­தா­ளர்கள் 84 பேருக்கு எதி­ராக  வழக்குத் தொடுக்­கப்­பட்­ட­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­தி­ருந்­தது.

அதே­வேளை, பயங்­க­ர­வாத அமைப்பு ஒன்றை ஸ்தாபித்­தனர் என்ற குற்­றச்­சாட்டு தொடர்பில் 53 பேர் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்­டுள்­ளனர் எனவும் அவர்­களில் 43 பேருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அரச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

அபு­தாபி சமஷ்டி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தினால் இத்­தண்­ட­னைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

மேற்­படி பிர­தி­வா­தி­களில் பெரும்­பா­லானோர் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பைச் சேரந்­த­வர்கள் என ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சட்டமா அதிபர் கடந்த ஜன­வரி மாதம் தெரி­வித்­தி­ருந்தார். இவ்­வ­மைப்பு அந்­நாட்டில் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

மேற்­படி நபர்கள் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் வன்­மு­றைகள் மற்றும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக இர­க­சிய அமைப்­பொன்றை ஸ்தாபித்­தி­ருந்­தனர் எனவும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் சட்டமா அதிபர் கூறி­யி­ருந்தார்.

இது தொடர்­பான வழக்­கு­களில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட 43 பேருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­துடன் மேலும் 10 பேருக்கு 10 முதல் 15 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இவர்களில் பெரும்பாலோனர் 2013ஆம் ஆண்டு முதல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன தெரிவித்துள்ளன.