யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்டனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் தலா ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





