இந்தோனேசியாவின், மத்திய ஜாவாவில் கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் காணாமல் போன 12 பேரை தேடிவருகிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை சிலாகாப் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிபியூனிங் கிராமத்தில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
3 முதல் 8 மீட்டர் (10-25 அடி) ஆழத்தில் மக்கள் புதைந்திருந்ததால் மீட்புப் பணி சவாலானது மாறியுள்ளது.
நேற்று மூன்று பேரும் இன்று எட்டு பேருமாக 11 பேர் உயிரிழந்தனர். பன்னிரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் என இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசிய நாட்டில் மழைக்காலம் செம்டெம்பர் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதால் வெள்ளப்பெருக்கு மற்றும் அதிகளவான மழை பெய்யும் வானிலை அவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மத்திய ஜாவா நகரமான பெக்கலோங்கனில் பெய்த மழையால் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்தனர்.





