பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சென்னையில் மிதமான மழைக்கே பல தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அசாதாரண மழை என்றால் பரவாயில்லை.
சாதாரண மழைக்கு சென்னை தாங்குவதாக தெரியவில்லை. இயற்கையான மழைக்கு கூட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் கண்காணித்தார் என்று விளம்பர போட்டோக்கள் வருகின்றன.
சாலையை சரி செய்து விட்டு கட்டுப்பாட்டு அறையில் பார்த்தால் தான் நல்ல சாலை தெரியும். சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.சென்னை மட்டுமல்ல டெல்டாவிலும் இதே கதை தான். ஒரே நாளில் 20 லட்சம் டன் நெற்பயிர்கள் வீணாகி இருக்கின்றன.
எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று சொல்லும் முதலமைச்சரே இந்தியாவிற்கே வழிகாட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் வலியைத் தான் கூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.இவ்வாறு அதில் கூறினார்.



