களுபோவில துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொஹுவலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுபோவில பிரதேசத்திற்கு நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பேலியகொடை – கெஸ்பேவ வீதியில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.