கோட்டாபய ராஜபக்ஷவை சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று வெள்ளிக்கிழமை (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.