நொச்சியாகமவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அநுராதபுரம், நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொகுன்னேன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (27) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொச்சியாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம், ரனோராவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு உள்நாட்டுத் துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.