நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் அமுலாகும் வகையில், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் மற்றும் தொடர்புடைய உள்ளுர் நீர் வழிகளிலும் பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.