அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் அம்மன் மகளிர் இல்லத்துக்குச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் புதன்கிழமை (28.01.2026) மாலை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த மகளிர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 42 பெண் பிள்ளைகளுக்கு 80 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பிள்ளைகளின் ஏனைய தேவைகளுக்காக 50 ஆயிரம் ரூபா நிதியும் வழங்கப்பட்டன.