குருநாகல் - தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (07) இரவு குருநாகல் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 126 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மாஸ்பொத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (07) பகல் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 14 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 325,000 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பாதுக்கை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space