களுத்துறை வடக்கு பொலிஸ் எல்லைக்குட்பட்ட வாடியமங்கட பகுதியில் சனிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இரவு 7.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் கடுமையாக காயமடைந்தார்.
பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32 வயது நபர் பலி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space