சிவனொளிபாதமலை வனப்பகுதியில் இன்று வியாழக்கிழமை (19) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கடுமையான வரட்சியான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிய விலங்கு இனங்கள் மற்றும் தாவர அமைப்புகள் நிறைந்த இந்த பகுதி, பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட பகுதியாகும்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த மதிப்புமிக்க சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உயிரினங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மிகவும் கடினமான மலை உச்சியில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளமையால், இதுவரை எந்த குழுவும் அந்த இடத்தை அடைந்து தீயை அணைக்க முடியவில்லை.
சிவனொளிபாதமலை வனப்பகுதியில் தீ
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space