நுவரெலியாவில் இறுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விக்டோரியா பூங்கா முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியது இதனை நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து சிரமதானம் மூலம் வெள்ளிக்கிழமை (09) நாள் முழுவதும்  தூய்மைப்படுத்தப்பட்டன.

இதன்போது  விக்டோரியா பூங்காவில் உள் மற்றும் வெளிப்புறச் சூழல் பூங்காவை சுற்றியுள்ள  வடிகான்கள் என்பன சிரமதானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுவர் பூங்காவில் தேங்கி காணப்பட்ட  பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன், கண்ணாடிகள், ஏனையவை என மூன்று பகுதிகளாக தரம்பிரிக்கப்பட்டு பெருந்திரளான திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டன மேலும் தாழ்வான பகுதிகளில் காணப்பட்ட சேறும், சகதியும் கலந்து மண் திட்டுக்களையும் வெட்டி அகற்றி தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் டப்ள்யூ. எம். உபாலி வணிகசேகர மற்றும் பிரதி முதல்வர் உட்பட அனைத்தும் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.