கல்கிரியாகம - உஸ்ஸான பகுதியில் பூப்பறிக்க சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (10) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
குளத்தில் பூ பறிக்கச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்கிரியாகம பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூப்பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space