மாத்தறை - தெவிநுவர பகுதியில், பல்பொருள் அங்காடி நிலையம் ஒன்றிற்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாத்தறை - தெவிநுவர பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space