மாவடிப்பள்ளி ஆற்றில் கரையொதுங்கியது சடலம்
Ad Space
Ad Space
Ad Space
அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.மேலும், இச்சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளில் காரைதீவு பொலிஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனனர்.
Ad Space
Ad Space
Ad Space