யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்திற்கும் கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன விற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவர்களின் தொழில்சார் தேவைகள், நலன்புரி விடயங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
ஊழியர் சங்கத்தின் அழைப்பின் பேரில், இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் கலந்து கொண்டு, ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கம் கல்வி பிரதி அமைச்சருடன் கலந்துரையாடல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space