கடுவலை - வெலிவிட்ட பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடுவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் கடுவலை - வெலிவிட்ட பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.