வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தைப்பொங்கல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16.01.2026) காலை-09 மணியளவில் யாழ் கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின்  தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.


இப் பொங்கல் நிகழ்வில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சிவகுமார் சிவானந்தன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.