கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் போலி பெண் காவல்துறை பரிசோதகர் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் புறக்கோட்டை பகுதியில் உள்ள விடுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பிஸ்டல் ரக துப்பாக்கிக்கு ஒத்த போலி துப்பாக்கி ஒன்றை கையில் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.