கொழும்பு - தொட்டலங்க பகுதியில், போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று வியாழக்கிழமை (19) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 21,000 வெளிநாட்டு சிகெரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

54 வயதுடைய இந்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.