2026ஆம் ஆண்டுக்கான 6ஆம் வகுப்பு பாடத்திட்டம் தொடர்பில் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை செயற்படுத்தக் கோரி, 6ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சின் முன் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
பெற்றோர்கள் மட்டுமன்றி மாணவர்களும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆங்கில பாடத்திட்டத்தைத் தவிர்த்து, ஏனைய பாடங்களுடன் தொடர்புடைய தொகுதிகளை மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6ஆம் வகுப்பு மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space