அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆவார். ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இந்திய-அமெரிக்க மாணவி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் "அல்லாஹ்வின் சொத்து" என்ற வாசகங்களும் இருந்தன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வார இறுதியில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய மோதல் வெடித்த நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் தற்போது உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் ஈரானுடனான தொடர்புகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space