சுரேஷ் சலே மீது 2019 இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணையில் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில், 2018 வவுணதீவு இரு பொலிஸ் அதிகாரிகள் கொலை மற்றும் 2019 சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவங்களின் விசாரணைகளை திட்டமிட்டு திசைதிருப்பியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தைத் தாக்குதலுக்கான இலக்காக அடையாளம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, தாக்குதல் நடைபெறலாம் என்ற முன்னறிவிப்பு கிடைத்திருந்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் CID குறிப்பிட்டது.
இதற்கு எதிராக சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சம்பவம் நடந்த காலத்தில் அவர் மலேசியாவில் இருந்ததாகவும், பல விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் புதிய குற்றச்சாட்டுகள் முன்வைப்பது பக்கச்சார்பானது எனவும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், மேலதிக விசாரணைகள் அவசியம் எனக் குறிப்பிட்டு வழக்கை மார்ச் 25ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே மீது மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space