யாழ்.உடுப்பிட்டி இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலய நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த பாடசாலையில் நிலவும் சுத்தமான குடிநீர் இன்மையைச் சீர் செய்யும் பொருட்டுச் சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட புதிய குடிநீர் இயந்திரத் தொகுதி பொருத்தப்பட்டுச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளால் இன்று புதன்கிழமை (20.05.2026) திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.