ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்கூடல் பகுதியில் நேற்று (01) சனிக்கிழமை ஆமைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடமிருந்து ஆறு கடலாமைகளும் மீட்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படன.
பின்னர் நேற்றைய தினம் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.