எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (20.01.2026) இரவு யாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் கைதான ஏழு இந்தியாவின் தமிழக மீனவர்களும் அடுத்த மாதம் -03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி ஏழு இந்தியாவின் தமிழக மீனவர்களும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். ஏழு மீனவர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (21) முற்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.